சக்கராப்பள்ளி ஊராட்சியில் 4.50 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க அடிக்கல் விழா …

மாநிலங்கவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் பங்கேற்பு……

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் சக்கராப்பள்ளி ஊராட்சியில் மாநிலங்கவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்கவை உறுப்பினரும் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான சு.கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன்,கும்பகோணம் துணை மேயர் தமிழழகன் , மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *