எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடிபழனிசாமி சுவாமி தரிசனம் .

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் செல்வ முத்துக்குமாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.

இக்கோயில் நோய் தீர்க்கும் ஸ்தலமாகவும், நவக்கிரகங்களில் முக்கிய ஒன்றான முக்கிய ஒன்றான செவ்வாய் பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. கோயிலில் உள்ள சித்தா மிருத தீர்த்த குளத்தில் நீராடி சுவாமியை வழிபட்டால் 4 ஆயிரத்து 448 நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.சிறப்பு பெற்ற இக்கோயிலுக்கு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்தார் முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் கட்டளை தம்பிரான் சைலஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள் , சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்றனர் .

தொடர்ந்து கற்பக விநாயகர், வைத்தியநாதர்சுவாமி ,செல்வ முத்துக்குமாரசுவாமி, தையல்நாயகி அம்மன், அங்காரகன் ஆகிய சுவாமி சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ்,மாவட்ட அவைத்தலைவர் பி.வி. பாரதி, முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராதாகிருஷ்ணன், ராமராமநாதன், சக்தி, முருகுமாறன் ,கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே.எம்.நற்குணன்,தொழிலதிபர் மார்க்கோனி மற்றும் ஏராளமான அதிமுகவினர்கள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *