பாபநாசம் அருகே ரயிலில் அடிபட்டு மேய்ச்சலுக்கு வந்த 16 ஆடுகள் பலி…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருபாலைத்துறை எஸ் பி ஜே மிஷன் தெருவில் வசித்து வருபவர் கணேசன் மனைவி பேச்சியம்மாள் (50). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். மேலும் இவர் தனது வீட்டில் 18-ஆடுகளை வளர்த்து வந்துள்ளார் இந்த நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட்டுள்ளார்

நீண்ட நேரம் ஆகியும் மேச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு வந்து சேராததால், அக்கம் பக்கம் தேட ஆரம்பித்தார்.

அப்போது உத்தாணி ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி பேச்சியம்மாள் வளர்த்து வரும் 16-ஆடுகள் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி செல்லும் பேசஞ்சர் ரயிலில் அடிபட்டு காயங்களுடன் இறந்த நிலையிலும், ஒரு ஆடு ஒரு காலை இழந்த நிலையிலும், ஒரு ஆடு உயிர் தப்பிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பேச்சியம்மாள் செய்வதறியாது திகைத்து போய் கண்ணீருடன் கூச்சலிட்டார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உயிரிழந்த ஆடுகளை வாகனத்தில் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *