ஓசூரில் தனியார் மருத்துவமனை 10 நாட்கள் சிறப்பு இலவச மருத்துவ முகாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம்.
ஓசூரில் மீரா மல்ட்டி ஸ்பெஷலிட்டி தனியார் மருத்துவமனை நடத்தும்10 நாள் சிறப்பு இலவச மருத்துவ முகாம்.கண், காது, மூக்கு கிட்டப்பார்வை தூரப்பார்வை சுவாசக் கோளாறு மற்றும தொண்டை பிரச்சனைகளுக்கு – மருத்துவ ஆலோசனை இலவசமாக செய்யப்படுகிறது.

ஓசூர், மீரா மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையின்தலைவர் மற்றும மூத்த மருத்துவர் T.T.சண்முகவேலு, MS,நிர்வாக இயக்குனர் மருத்துவர் T.T.S.பாரி, MD, DM (உயிர் காக்கும் அவசர சிகிச்சை நிபுணர்)இயக்குனர் மற்றும பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மருத்துவர் அம்பிகா பாரி, MS, OBG ஆகியோரின் அறிவுறுத்தலின்படி
மருத்துவர்.T. உமாராணி , MS, கண் அறுவை சிகிச்சை நிபுணர்,மருத்துவர்.சௌமியா ராஜா, MS, காது, மூக்கு மற்றும தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள் அகல்யா, நிஷா, மூத்த பரிசோதனையாளர்கள் தனலதா, நளாயினி ஆகியோர் இலவச மருத்துவ முகாமிருக்கு திரளாக வந்திருந்த நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இம்முகாமில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.
மீரா மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையின் இலவச மருத்துவ முகாம் சிறப்பு குழு பணியாளர்கள் சுகுணா, கிருஷ்ணா, பிரகா‌ஷ், நித்யா, விஜய், கோகிலா, தமிழ்செல்வி, மேரி, திருமூர்த்தி, பாலாஜி, எல்.கீர்த்தனா, இவான்செலின், லாவண்யா, எஸ். கீர்த்தனா மற்றும் கீர்த்திகா ஆகியோர் முகாமில் சேவை செய்தனர். மூத்த பணியாளர்கள் அமுதா, கமலா, சாந்தி, சதீஷ் மற்றும் மனிதவள மேம்பாட்டு மேனேஜர் சிந்துஜா ஆகியோர் உறுதுணை புரிந்தனர்.

முன்னதாக இந்த 10 நாள் இலவச மருத்துவ ஆலோசனை முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாள‌ர் கோபாலகிருஷ்ணன் சிறப்பாக செய்துள்ளார்.

இம்முகாம் (25.02.2024) அன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை ஓசூர், ராயக்கோட்டை ரோடு, மீரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில் நடைபெறும் அனைத்து பொது மக்களும் கலந்துக்கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகள் பெறலாம். எனவும் ஓசூர் இராயக்கோட்டை சாலையில் உள்ள மீரா மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அழைக்கின்றார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *