தமிழ்நாடு அரசு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர் யூனியன் சங்க திருவாரூர் மாவட்ட பத்திரிக்கையாளர் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு தமிழ்நாட்டில் உள்ள உள்ள மாவட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் களுக்கு அரசால் வழங்கப்படும் பேருந்து சலுகை பயண அட்டையின் கீழே சென்னையை தவிர்த்து ஏனைய இடங்களுக்கு பயணம் செய்யலாம்
( Permitted to Travel in All Busses Except Chennai) என்ற ஒரு வரி உள்ளது

இதனால் பத்திரிகையாளர்கள் சென்னை செல்வதற்கு பயண சீட்டு பெற வேண்டிய சூழ்நிலை பலருக்கு ஏற்படுகிறது இதனை கருத்தில் கொண்டு நமது தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டஸ் யூனியன் சார்பில் திருவாரூர் வருகை தந்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் .எஸ். சிவசங்கர் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது

உடனிருந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அவர்களும் நமது கோரிக்கையை அமைச்சரிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார். நிகழ்வின் போது சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் முன்னாள் அமைச்சர் உ. மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்

மனுவை பத்திரிக்கையாளர் சங்க சங்க மாநில இணைச் செயலாளர் எஸ். ஜெயராமன் மற்றும் மாநில அமைப்பு செயலாளர் B .ஜாகிர் உசேன் ஆகியோர் திருவாரூர் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் அமைச்சரிடம் அளித்தனர் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்கள் உடன் இருந்தனர்
கோரிக்கையை கனிவுடன் கேட்ட போக்குவரத்துறை அமைச்சர் விரைவில் கவனிப்பதாக உறுதி அளித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *