பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே வடக்குமாங்குடி ஸ்ரீ மகா காளியம்மன், பாப்பாத்தி அம்மன் ஆலய கும்பாபிஷேக முளைப்பாரி ஊர்வலம்..
திராளான பெண்கள் கோலாகலாமாக நடனம் ஆடி முளைப்பாரி எடுத்து வந்து சுவாமி தரிசனம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வடக்கு மாங்குடி, பெரியார் நகரில் ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ பாப்பாத்தி அம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையடுத்து, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி தினமும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து யானையில் பொய்கை ஆற்றங்கரையில் இருந்து முளைப்பாரி மற்றும் விக்கிரகங்கள் மேளதாளங்கள் முழங்க, சிலம்பாட்டம் மற்றும் கோலாட்டங்களுடன்
ஊர்வலமாக கோயிலுக்கு வந்தன. இதில் திராளான பெண்கள் கலந்து கொண்டு தாரைதப்பட்டையுடன் நடனம் ஆடி முளைப்பாரி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வடக்கு மாங்குடி பெரியார் நகர் கிராமவாசிகள் செய்திருந்தனர்.