கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தென் திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையம் அன்னூர் K. கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினரின் K.G தொழில் நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆலயத்தில் ரத சப்தமியை முன்னிட்டு தங்க தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக பெருமாளுக்கு அலங்காரம், விசேஷ ஆர்த்தி நடைபெற்றது.இதை அடுத்து க்ஷே வாகனம், அன்னபட்சி வாகனம், அனுமந்த வாகனங்களில் பெருமாள் திருக்கோயிலை வலம் வந்தார். இதை அடுத்து முக்கிய நிகழ்வாக பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தங்கத்தேரில் எழுந்தருளினார்.

இதை அடுத்து மங்கள வாத்தியங்கள் ஒலிக்க பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் நான்குமாட வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் நிலை சேர்ந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *