மதுரை மாவட்டம், மேலூர் வட்டார வளமயத்தைச் சார்ந்த நகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை உதவி திட்ட அலுவலர் கார்மேகம் ,வட்டார கல்வி அலுவலர் அழகு மீனா,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு,தலைமை ஆசிரியர் மங்கையர்க்கரசி,
ஆசிரியர் பயிற்றுநர் லூசியானா மார்கிரேட் மேரி, ஆகியோருடன் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், துணைத்தலைவர் பி.டி.ஏ. தலைவர் பார்வையிட்டனர்.
மையத்தில் சாலை பாதுகாப்பு குறித்து நடிப்பு மூலம் புதுமையாக்க முறையில் அனீஷ் பாத்திமாவால் வகுப்பு நடத்தப்பட்டது.
மையத்தில் கற்போரின் வருகை, ஆர்வம், எஸ்.எம்.சி. – பி. டி. ஏ. ஆகியோர் களின் ஒத்துழைப்பு குறித்து கார்மேகம் மைய பொறுப்பாளர் களை வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *