கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் ‘நிருத்ய யாத்ரா “என்ற 24ம்ஆண்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்பொழுது பள்ளிப் பருவம் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டம், அதற்கு காரணம் பள்ளிக்கூடத்தில் நமக்கு கிடைக்கின்ற மிக உண்மையான நட்புதான் வாழ்க்கையின் நிறைவு வரை தொடர்கின்ற நட்பு ஆகவே பள்ளி பருவம் நமக்கு எப்பொழுதும் மகிழ்ச்சியான காலத்தை நினைவூட்டுவதாக பேசினார்.மேலும்
சிறப்பான மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்குசான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
ஆண்டுவிழாவை முன்னிட்டு மாணவ மாணவியர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவை சிபிஎஸ்சி தென்மண்டல அதிகாரி திரு தினேஷ் ராம், பள்ளியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், அறங்காவலர் திரு. மோகன் தாஸ் மற்றும் பள்ளி முதல்வர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்