மதுரை ராஜாக்கூரில் அமைந்துள்ள எம் பி எப் சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா பிப்ரவரி 5ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் முனைவர். காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் மாணவ மாணவிகளின் நடனம் மற்றும் நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை எம் பி எப் பள்ளி நிர்வாகக்குழு தலைவர் கல்வாரி தியாகராசன், பொருளாளர் அபுபக்கர் சித்திக், துணை தலைவர் பிரதாப், இணை செயலாளர் சஃபானா சஃப்னம் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் பள்ளி முதல்வர் கற்பகவள்ளி மற்றும் ஆசிரியர்களும் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.