கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தஞ்சை மண்டலம் சார்பாக அசைவ அறுசுவை சமத்துவ விருந்து கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தொடங்கி வைத்தார் …
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தஞ்சை மண்டலம் சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர் .சரத்குமார் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை அசைவு உணவை தன் கையால் பரிமாறினார்.
பின்பு மக்களோடு மக்களாக அறுசுவை அசைவ விருந்தில் கலந்துகொண்டு உணவை உண்டு மகிழ்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் , உறுப்பினர்கள்,மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.