வெள்ளையகவுண்டனூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா. 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் மண்டலவாடி அடுத்த வெள்ளையகவுண்டனூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எருது விடும் திருவிழா ஊர் கவுண்டர் ரவி மற்றும் ஊர் தர்மகர்த்தா சிவபெருமாள் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு வாடிவாசல் வழியாக ஓடியது.

இதில் குறைந்த நேரத்தில் ஓடிய காளைகளுக்கு பரிசுகள் 75 ஆயிரம் , 60 ஆயிரம், 45 ஆயிரம், 30 ஆயிரம் என மொத்தம் 47 பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஜோலார்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் கவிதா தண்டபாணி, ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், ரேவதி சுரேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *