திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் ஒன்றிய குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேபி ஷாலினிஅனைவரையும் வரவேற்றுப் பேசினார், புனிதவதி தலைமை வகித்தார்

சுபா, புஷ்பவல்லி, அலமேலு மங்கை, மைனாவதி, மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில நிர்வாக குழு உறுப்பினர் அன்பரசன், மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஜெயசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தின் நோக்கம் ஊக்குவிப்பாளர்கள் ஊதியம், தூய்மை காவலர்கள் ஊதியம் மற்றும் சீருடைகள், உறுப்பினர்கள் சந்தா மேம்படுத்துதல், ஓ எச் டி ஆப்பரேட்டர்கள்,தூய்மை பணியாளர்கள் ஊதியம் நிலுவை போன்ற நிகழ்வுகள் பேசப்பட்டது. கூட்டம் இறுதியில் வீராசாமி நன்றி உரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *