பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே
திருக்கருகாவூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி பங்கேற்பு …..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் மேற்கு மாவட்ட இணை செயலாளர் இளமதி சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தலைமை கழக பேச்சாளர் புலிசை சந்திரகாசன் மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தனசாமி மற்றும் தலைமைக் கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் .
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் அதிமுக சார்பில் புடவை வழங்கப்பட்டது மேலும் மாற்றுக் கட்சியிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர்கள், சார்பணி செயலாளர்கள், நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.