பாபநாசத்தில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாக செல்லும் பரப்புரை துவக்க விழா…

முன்னாள் அமைச்சர், எம்.பி. பங்கேற்பு ……

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாகச் செல்லும் பரப்புரை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் தாட்கோ தலைவருமான உ. மதிவாணன் , மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பரப்புரை நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.

இதில் ஒன்றிய கழக செயலாளர் நாசர் , ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் பேரூர் கழகச் செயலாளர் கபிலன், பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி கபிலன், துணைச் செயலாளர்கள் கருணாகரன், கலியமூர்த்தி,மற்றும் ஒன்றிய ,பேரூர், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *