பாபநாசம் அருகே அரையபுரம், தட்டுமால் படுகை விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்காததை கண்டித்து…

இரண்டாவது நாளாக சமையல் செய்து, சாப்பிட்டு உண்டு உறங்கும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அரையபுரம் தட்டுமால் படுகையில் 25-ஆண்டுகளாக வசிக்கும், சாகுபடி செய்து வரும் 350-விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக
ரயத்து வாரியாக மாற்றம் செய்து விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி பாபநாசம் அரசலாறு முனீஸ்வரர் கோயில் வளாகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜ் தலைமையில் இரண்டாம் நாளாக இன்று விவசாயிகள் சமையல் செய்து சாப்பிட்டு, உண்டு உறங்கி, கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *