மதுரையில் அருந்ததியர் மக்கள் சுடுகாட்டில் குடியேறும் போராட்டம்.
மதுரை மாவட்டம் வண்டியூர் தீர்த்தக்காட்டில் வாழும் அருந்ததியர் மக்கள் நீண்ட காலமாக வழிபட்டு வந்த கருப்பணசாமி கோவிலில் சாமி கும்பிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு சமூகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மதுரை மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளை கண்டித்தும் அருந்ததியர் மக்கள் நீண்ட காலமாக வழிபட்டு வந்த கருப்பணசாமி கோவிலை இடித்து தள்ளிய ஆதிதிராவிட நலத்துறை துணை ஆட்சியர், அலகு II தாசில்தார் மீதும் நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யவும் , ஒரு சமுதாயத்திற்கு மட்டும் தீர்த்தக்காட்டில் இலவச பட்டா வழங்காமல், மாரியம்மன் நகர், பாம்பாட்டிநகர், சங்குநகர் காளியம்மன் கோவில் தெரு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.