தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பையாபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைப்பெற்றது.

இவ்விழாவில் ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் எம் திவ்யா மணிகண்டன். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றி வைத்து குழந்தைகளுடன் கலந்துரையாடினார்

இந்நிகழ்ச்சியில் சுப்பையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலெட்சுமி முருகன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி, வட்டார மேற்பார்வையாளர் பழனியம்மாள், மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உதவியாளர்கள் ,
கிளை கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் பெற்றேர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *