சீர்காழியில் முன்னாள் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாததால் ஏற்பட்ட தகராரை தட்டிக்கேட்ட சக ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவை தீ வைத்து எரித்த லாரி ஓட்டுநர் கைது.சீர்காழி போலீசார் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த மெக்கானிக் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை சீர்காழி அருகே குளங்கரை கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவர் ஓட்டி வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன் வினோத் ஆட்டோவில் சென்ற போது இவருக்கு முன்னாள் சென்ற ஆட்டோவிற்கு எதிரே வந்த லாரி வழிவிடாததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் போக்குவரத்து பாதிக்கபடுவதை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத் பாதிக்கப்பட்ட சக ஆட்டோ ஓட்டுநர் மற்றும் லாரி ஓட்டுநரிடையே சமாதானம் செய்ய முயன்றார்.

இதில் அந்த லாரியில் வந்த மற்றொரு ஓட்டுநர் ராமுவுக்கும் வினோத்திற்கும் தகராறு ஏற்பட்ட பின்னர் கலைந்து சென்றனர். இந்நிலையில் இன்று வினோத் தனது ஆட்டோவை திட்டை ரோடு சந்திப்பில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள டீ கடைக்கு சென்று டீ குடித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது முன்விரோதம் காரணமாக சீர்காழி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ராமு திடீரென நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

இதில் தீ மளவென ஆட்டோ முழுவதும் பற்றி எரிந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்துக்குள்ளான ஆட்டோவை மீட்டதுடன் ஆட்டோவுக்கு தீ வைத்துவிட்டு அங்கேயே நின்ற லாரி டிரைவர் ராமுவையும் கைது செய்து அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *