மதுரை மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கமும்,இளையோர் செஞ்சிலுவை சங்கமும், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்
களுக்கான இந்த ஆண்டிற்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது.

மாணவ மாணவியரும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். சிறப்பு முகாமினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா வருகை தந்து முகாமை துவக்கி வைத்து மாணவர்களுக்கு சிறப்பு செய்தி வழங்கினார் .

மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் முத்துலட்சுமி வருகை தந்து மாணவர்களுடைய உடல் நலம் , சமூக சேவை, மற்றும் நட்புறவு குறித்து அழகாக மாணவர்களுக்கு விளக்கி கூறினார் .சிறப்பு முகாமில் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்க செயலர் ராஜ்குமார் வருகை தந்து சிறப்பித்தார்.

முகாம் பயிற்சியாளர்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ரவிச்சந்திரனும் சந்திரநாத்தும் , அறந்தாங்கி கல்வி மாவட்ட செயலர் தமிழ்ச்செல்வனும் வருகை தந்து முகாமின் பயிற்சியாளர்களாக சிறப்பித்தார்.

முகாமிற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து செல்வகுமார் வருகை தந்து சிறப்பித்தார். இம் முகாமை மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன் மாயாண்டி துரை , சுகந்தி, பாலகிருஷ்ணன், ஒளிவா மற்றும் பொருளாளர் நாகராஜன் பங்கு பெற்று முகாமை சிறப்பித்தார். இம் முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் செய்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *