மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ. ஐ. டி. யு. சி கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்டுமான பொருட்கள் மணல், சிமிண்ட், கம்பி விலையைக் கட்டுப்படுத்தவும், கட்டுமான தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்கு தேவையான அளவு நலவாரியத்தில் குறைந்தபட்சம் 2% முதல் 5% வரை உயர்த்திவசூல் செய்யவும், நலவாரிய கணினி சர்வர் பிரச்சனையை சரி செய்யவும், நலவாரிய கணினி சர்வர் வேலை செய்யாத காலத்தில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்யவும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் இருளாண்டி தலைமை தாங்கினார்.
மாவட்டத் தலைவர் அலெக்ஸ் நாராயணன், சக்திவேல், மணிமேகலை ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
மாநகர் மாவட்டச் செயலாளர் முருகன்
சிறப்புரை வழங்கினார் புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துவேல் மாநில பொருளாளர் இரா.முருகன் , மாவட்ட பொதுச் செயலாளர் சேது, மாவட்ட பொருளாளர் சின்னச்சாமி நன்றி கூறினார்.