தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி, ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து நடத்தியது
நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சி.பரஞ்சோதி முன்னிலை வகித்தார்.
இரத்த குருதி வங்கி மருத்துவர் பிரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் நிகழ்வை நாட்டு நலப்பணித் திட்டம் அலுவலர் சதீஷ், பெருமாள், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் திருவாசகம் ஒருங்கிணைத்தனர்.
நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் இரத்த தானம் செய்தனர்.