அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தண்டலை ஊராட்சியில் ஆதிதிராவிடர் சமுதாய கூட கட்டிட பூமி பூஜை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, பிரேமராஜன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சுஅழகு, துணைத் தலைவர் சங்கீதாமணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் வீரலட்சுமிஜெயக்குமார், ஒன்றிய துணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், அருண்குமார், பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத் தலைவர் சுவாமிநாதன், ஒப்பந்ததாரர் கண்ணன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்
சந்தனகருப்பு, தகவல் தொழில்நுட்ப அணி சோழவந்தான் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தண்டலை தவசதீஷ், பொறியாளர் அணி ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.