மதுரை மாவட்ட ஊரகப்பகுதி காவல் கண் காணிப்பாளராக அர்விந்த் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றிய டோங்கரே பிரவீன் உமேஷ், சிவகங்கை மாவட்டக் காவல் கண் காணிப்பாளராகபணியிட மாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டக்காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அர்விந்த், மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவர் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப் பாளராக பொறுப்பேற்று கொண்டார்.
கோவையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பி.இ. பட்டதாரி. யுபிஎஸ்சி (சிஎஸ்இ) தேர்வில் வெற்றி பெற்று, கடந்த 2019-ம் ஆண்டுதான் இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *