தவக்கால நிகழ்வாக புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாதயாத்திரை

மதுரை மாவட்டம், திருநகரில் அமைந்துள்ள புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தில்
பங்குத்தந்தை அருட்திரு ஜார்ஜ் எட்வின் அவர்களது தலைமையில் தவக்கால நிகழ்வாக பங்குமக்கள் புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்திலிருந்து வேடர் புளியங் குளத்தில் அமைந்துள்ள புனித குழந்தை இயேசு சிற்றாலயத்திற்கு பாதயாத்திரையாக சென்றனர்.

மறைக்கல்வி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 350 பக்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வினை பங்குத்தந்தையுடன் இணைந்து பங்குப்பேரவையினர் வழிநடத்தினர்.

தவக்காலத்தில் இந்த பாதயாத்திரையானது இயேசுவின் பாடுகளை தியானிக்க வழி வகுப்பதாக அமைந்திருந்தது. வேடர்புளியங்குளத்
தில் உள்ள புனித குழந்தை இயேசு சிற்றாலயத்தில் திருப்பலியுடன் இனிதே நிறைவடைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *