வலங்கைமானில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டிடத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சிமூலம் திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனை ஒட்டி வட்டாட்சியர் ரஷ்யா பேகம், கிராம நிர்வாக அலுவலர் வடிவேல், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன், திமுக நகர செயலாளர் பா. சிவனேசன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க. செல்வம், பொருளாளர் எஸ். ஆர். ராஜேஷ், ஆறாவது வார்டு திமுக பொருளாளர் கோ. சண்முகசுந்தரம் யாதவ் உள்பட அலுவலர்கள், கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கினை ஏற்றி வைத்து, தமிழக முதல்வருக்கு நன்றினை தெரிவித்துக் கொண்டனர்.