ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
தமிழகத்தில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் திருவாரூர் மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்களுக்கான பணி குறித்து ஆலோசனைக் கூட்டம்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் தலைமையில் 2024 – நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு மார்ச் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை( இன்று) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவலர்களுக்கான தேர்தல் பணி குறித்து சிறப்பு கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வளாகத்தில் அமைந்துள்ள கருத்தரங்க கூட்டரங்கில் நடைபெற்றது
தேர்தல் பணி குறித்து நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அவர்களது பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினார்
மேலும் பணியில் காவலர்கள் குழுவினர் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் (24X7) பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என. தெரிவித்தார்
நிகழ்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டீ. ஈஸ்வரன் உடனிருந்தார்