மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பகுதியில் அதிமுக சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் சார்பாக மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்மான ஆர்.பி.உதயகுமார், கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பொதுமக்களுக்கு அன்னதானத்தினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை நிர்வாகி வெற்றிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், கருப்பையா, மாணிக்கம், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வாடிப்பட்டி நகர செயலாளர் அசோக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.