மதுரை மேலூரில்பள்ளி ஆயத்தப்பயிற்சி மையம் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வேப்படப்பில் மேலூர் வட்டார அளவிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஏதுவான சுற்றுச் சூழலை உருவாக்க விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மேலூர் வட்டாரக்கல்வி அலுவலர் ஜெயசித்ரா தலைமையில் நடைபெற்றது, பள்ளித்தலைமை ஆசிரியர் அம்பாள்பாய் முன்னிலையில் வைத்தார்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் சுகன்யா வரவேற்று பேசினார். வட்டார மேற்பார்வையாளர் (பொ) கீதா விளையாட்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்கள்.
புதிரை கண்டுபிடி , நடித்து விளையாடு மற்றும் பலூன் விளையாட்டு ஆகிய மூன்று விதமான விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், இயல்பான மாணவர்கள், 50 மாற்றுத்திறன் மாணவர்கள் அனைவரும்
பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, போக்குவரத்துப்படி மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அனைத்து சிறப்புப்பயிற்றுநர்கள் , இயன்முறை மருத்துவர், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி ஆயத்தப்பயிற்சி மைய பாதுகாவலர், உதவியாளர் சிறப்பான பங்களிப்பை அளித்து விளையாட்டு போட்டி நிகழ்ச்சியினை இனிதே நடத்தினர்.
ஆரோக்கிய நல வாழ்வு அறக்கட்டளை சார்பாகவும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மையம் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் மேலூர் வட்டார அளவிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஏதுவான சுற்றுச் சூழலை உருவாக்க விளையாட்டு நிகழ்சசிகள் நடைபெற்றது
இந்நிகழ்ச்சி மேலூர் வட்டாரக்கல்வி அலுவலர் ஜெயசித்ரா தலைமையில் நடைபெற்றது, பள்ளித்தலைமை ஆசிரியர் அம்பாள்பாய் முன்னிலையில் வைத்தார்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுகன்யா வரவேற்று பேசினார். வட்டார மேற்பார்வையாளர் (பொ) கீதா விளையாட்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
பின்னர் புதிரை கண்டு பிடி , நடித்து விளையாடு மற்றும் பலூன் விளையாட்டு ஆகிய மூன்று விதமான விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், இயல்பான மாணவர்கள், 50 மாற்றுத்திறன் மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து சிறப்புப் பயிற்றுநர்கள் ,
இயன்முறை மருத்துவர், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி ஆயத்தப்பயிற்சி மைய பாதுகாவலர், உதவியாளர் சிறப்பான பங்களிப்பை அளித்து விளையாட்டு போட்டியினை இனிதே நடத்தினர்.