ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.

திருவாரூர் நகராட்சி நகர மன்ற சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் தலைமையில் நடைபெற்றது நகர மன்ற சாதாரண கூட்டத்திற்கு நகர மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

சாதாரண கூட்டத்தில் பங்கேற்ற நகர மன்ற உறுப்பினர்கள் தங்களின் வார்டு பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் நகர மன்ற உறுப்பினர்கள் டி செந்தில் இரா சங்கர் எஸ் என் அசோகன் எஸ் கலியபெருமாள் வாரை பிரகாஷ் வரதராஜன் அன்பழகன் சோலை புருஷோத்தமன் அய்யனார் மலர்விழி கலியபெருமாள் சசிகலா சித்தி விநாயகம் ஐஸ்வர்யா சிட்டு ஆசைமணி ராமு விஜயலட்சுமி சங்கர் ஷகிலா பானு உள்ளிட்ட அனைத்து பெண் நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர் நகராட்சி பொறியாளர் மற்றும் அனைத்து பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

திருவாரூர் விஜயபுரம் அரசு தாய் செய் நல மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஆறு கோடி நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே கலைவாணன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் உள்ளிட்ட கூட்டப் பொருளில் வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *