அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே பாரத ஸ்டேட் வங்கி கிளை அமைந்துள்ளது இந்த கிளை முன்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஒன்றிய மோடி அரசின் தேர்தல் பத்திர மோசடியை கண்டித்தும் மக்கள் பணத்தில் பல்லாயிரம் கோடி லஞ்சம் கொடுத்த பாஜகவை காப்பாற்றிக் கொண்டிருக்கும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஆலத்தூர்ரவிச்சந்திரன், தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு மக்களை ஏமாற்றி 10 ஆண்டுகள் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் மக்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் இதுவரை செய்யவில்லை என்றும் தமிழக அரசுக்கு தரவேண்டிய நிதியை சரியான முறையில் தரவில்லை என்று ரவுடிகளை வைத்துக்கொண்டு பாஜக என்று ஒரு கட்சி செயல்படுவதாகவும் விரைவில் பாரத ஸ்டேட் வங்கி மூடு விழா காண உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.

இதில் நிர்வாகிகள் ஜெயமணி, ராமமூர்த்தி, மலைக்கனி, சரந்தாங்கிமுத்து, செல்லப்பாசரவணன், சசிகுமார், பாலமேடு வைரமணி, சந்திரசேகரன், சோழவந்தான் மூர்த்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *