திருப்பனந்தாள் அருகே சோழபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு நலதிட்ட உதவிகள் மற்றும் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்.எல்.ஏ அன்பழகன் திறந்து வைத்தார்.

திருப்பனந்தாள் அருகே சோழபுரத்தில் கடை வீதியில் புதிய நிழற்குடை கட்டித் தர வேண்டும் என பொதுமக்களும் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடை கட்டுவதற்கு கடந்த ஆண்டு பணிகள் தொடங்கி நிறைவு பெற்றதை தொடர்ந்து புதிய நிழற்குடையை மக்கள் பயன்பாட்டிற்க்கு கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் திறந்து வைத்தார். இதனையடுத்து

மாற்றுத்திறனாளி மூன்று சக்கர சைக்கிள் தொழிலாளருக்கு சலவை எந்திரங்களை அன்பழகன் எம்.எல்.ஏ வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி ஆணையர் ஆனந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜரத்தினம், ஒன்றிய செயலாளர் சுதாகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், பேரூராட்சி தலைவர் கமலா செல்வமணி, பேரூராட்சி செயலாளர் ஜெப்ருதீன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் நேரு, முன்னாள் பேரூராட்சி தலைவர் வேல்முருகன், மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *