செய்தியாளர் ச. முருகவேல் நெட்டப்பாக்கம்
புதுவை நெட்டப்பாக்கம் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு தொடக்கி வைத்தார்.
முன்னதாக சூரமங்கலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு பயன்படும் தொலைநோக்கு சிந்தனையில் 16 லட்ச ரூபாய் செலவில் ஆழ்துளை கிணறு பணியை சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் வீர செல்வம், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் திருமதி பீனாராணி, இளநிலை பொறியாளர் சிவானந்தம் உட்பட திரளாக பலர் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து நெட்டப்பாக்கத்தில் 25 லட்ச ரூபாய் செலவில் வருவாய் துறை அலுவல கட்டிடத்திற்கான பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரி சோமசேகர் அப்பாராவ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், செயற்பொறியாளர் முனைவர் வல்லவன், உதவி பொறியாளர் பாவாடை, இளநிலை பொறியாளர் சண்முகம் உட்பட திரளாக பலர் கலந்து கொண்டனர்