மேட்டுப்பாளையம் வழக்கறிஞர் சங்கம் சார்பாக சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி

மூத்த வழக்குரைஞர் திருமதி மைதிலி தலைமையில் மேட்டுப்பாளையம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர்கள் சுமதி நடராஜ், கீதா திருப்பதி, தனலட்சுமி, சுகன்யா தேவி, ஏ. கே. ராதா, வ.சிந்துஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் திருமதி லட்சுமி காந்தா வரவேற்புரையாற்றினார்,

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் திருமதி கீதா நடராஜ், சார்பு நீதிபதி கெங்கராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி தமிழரசி, மாவட்ட உரிமையியல் நீதிபதி எல்.பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேட்டுப்பாளையம் வழக்குரைஞர்கள் சங்க தலைவர் கே. டி .சிவப்புகழ், செயலாளர் அபி புர் ரஹ்மான், அரசு வழக்குரைஞர் சிவ சுரேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியின் நிறைவாக வழக்குரைஞர் தனலட்சுமி நன்றி தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *