திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தனியார் திருமண அரங்கில் புரட்சி சிங்கள் இயக்கம் முத்தரையர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம்

புரட்சி சிங்கங்கள் இயக்கம் பொது செயலாளர் சிரஞ்சீவி தலைமையில் நடைபெற்றது நிர்வாகிகள் கூட்டத்தில் முத்தரையர் கூட்டமைப்பின் தலைவர் செந்தில்ஜி துணை பொது செயலாளர் அன்பழகன் நாகை மாவட்ட செயலாளர் புனிதா நாகை நாடளுமன்ற தொகுதி செயலாளர் வடிவழகன் மற்றும் சிறப்பு அழைப்பாளர் களாக திருத்துறைப்பூண்டி அண்ணா திமுக நகரக் கழக செயலாளர் சண்முகசுந்தர். திருத்துறைப்பூண்டி அண்ணா திமுக ஒன்றிய கழக செயலாளர் சிங்காரவேல் முத்துப்பேட்டை ஒன்றியம் புரட்சித்தலைவி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

அதனைத் தொடர்ந்து புரட்சி சிங்கங்கள் இயக்க பொதுசெயலாளர் சிரஞ்சிவி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர்க்கு மணிமண்டம் அமைத்து தந்த. கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சித் தமிழர் எடப்பாடியாருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வருகின்ற. நாடளுமன்ற தேர்தலில் நாகை தஞ்சை திருச்சி பெரம்பலூர் திருச்சி திண்டுக்கல் மதுரை சிவகங்கை உள்ளிட்ட முத்தரையர் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளிலும் தமிழகம் முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாகவும் மேலும் திராவிட முன்னேற்றக் கழக அரசு 500 க்கும் மேற்ப்பட்ட வாக்குறுதிகளை தந்து நிறைவேற்றாததை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் விதமாக திண்ணை பிரச்சாரம் செய்ய போவதாக தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *