பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி..
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருவைக்காவூரில் அமைந்துள்ள மகா சிவராத்திரி ஸ்தலமாக போற்றப்படும், அருள்மிகு வில்வவனேஸ்வரர் திருக்கோயிலில், தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதிஉலா காட்சி நடைபெற்றது . கோவில் முன்பு அமைந்துள்ள பஞ்ச மூர்த்திகள், எமகுளத்தில் தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடைபெற்றது. அதுசமயம் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு புனித நீராடினர்.