தென்காசி மாவட்டம் ஊத்துமலை சாந்த மரகதம் மஹாலில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம், குறிஞ்சாக்குளம் டெக்சிகரம் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை
இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இம் முகாமை அரவிந்த கண் மருத்துவ மனையின் மருத்துவர் மருத்துவர் டிட்டு, குறிஞ்சாக்குளம் டெக் சிகரம் சாப்ட்வேர் கம்பெனியைச் சேர்ந்த முருகேசன், விவேகானந்தா கேந்திர மகளிர் மன்ற பொறுப்பாளர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

விவேகானந்தா கேந்திர தென்காசி மாவட்ட இணை அமைப்பாளர் வேல்ராஜ் வரவேற்று பேசினார்.

முன்னதாக கேந்திரா சகோதரி மஞ்சு இறை வணக்கம் பாடினார் அரவிந்த்கண் மருத்துவமனையின் மருத்துவர் மருத்துவர் ஸ்ரீதர், விவேகானந்தா கேந்திர கருப்பசாமி ஆகியோர் முகாமின் முக்கியத்துவம் குறித்து வாழ்த்தி பேசினர்கள்.

முடிவில் மேலமருதப்பபுரம் காளிதாஸ் ரெட்டி நன்றி கூறனார் இம் முகாமில் ஊத்துமலை சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
இதில் நாற்பது பேர் கண்புரை ஆப்ரேஷனுக்காக நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்,

மற்றவர்களுக்கு மருந்து மற்றும் மருந்து மற்றும் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
கண் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களுக்கும் அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் பரிசோதனையும், சிகிச்சையும் அளித்தனர்.

முகாமில் விவேகானந்தா கேந்திர பாலர்
ஆசிரியர்கள் .வேணி, மகேஷ்,மஞ்சு, துர்கா தேவி மற்றும் டெக்சிகரம் சாப்டவேர் கம்பெனியை சேர்ந்த, வேணுகோபால், அருண்குமார்,ராம்குமார், நவின், சுகுமாறன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *