பாபநாசம் செய்தியாளர்
ஆர.தீனதயாளன்
திமுக ஆட்சியில் போதை பொருள் புழுக்கங்கள் அதிகமாக இருப்பதாகவும், அதைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும்..
தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில், பாபநாசத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அதிமுக ஒன்றிய செயலாளர் தியாக பழனிச்சாமி தலைமையில், தமிழகத்தில் போதை பொருள் புழக்கங்கள் அதிகமாக இருப்பதாகவும், அதைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்து அதிமுகவின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் சீரழியுது சீரழியுது கொலை கொள்ளை போதைப் பொருள்கள் வழிப்பறி உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தமிழ்நாடு சீரழியுது.
வேதனையாச்சி வேதனையாச்சி விடியா திமுக ஆட்சியில் வாக்களித்த மக்களின் வாழ்க்கையோ வேதனையாச்சி வேதனையாச்சி. பதவி விலகு பதவி விலகு போதைப் பொருள் கட்டுப்படுத்தாத
ஸ்டாலின் அரசு பதவி விலகு என்ற கோஷங்கள் இட்டவாறு, சட்டைப் பைகளில் கருப்பு பேஜ்கள் அணிந்த வண்ணம் அதிமுகவினர்
மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள் பெண்கள் என, அதிமுக-வின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.