அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி முன்பாக அதிமுக சார்பில் தமிழகத்தில் கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்களால் கல்லூரி மாணவ மாணவியர் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும் ஆளும் திமுக அரசு தடுக்க தவறி விட்டதாகவும் கூறி அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிபழனிச்சாமி, ஆணைக்கிணங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், ஆலோசனையின் பேரில் அலங்காநல்லூர் பேரூராட்சி முன்பாக ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமையிலும் நகர செயலாளர் அழகுராஜ், முன்னிலையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத், பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர்ராஜன், மற்றும் சுந்தர்ராகவன், நகர இணை செயலாளர் புளியம்மாள், பிரதிநிதி பாண்டிசெல்வி, வார்டு செயலாளர்கள் பாஸ்கரன், வெள்ளை கிருஷ்ணன், கணேசன், வலசைகார்த்திக், நகர மாவட்ட பிரதிநிதிகேட்டுகடைமுரளி, ஆறுமுகம், பாண்டியன், எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் எம்.எஸ்.சுந்தரம்,பெரியஊர்சேரி செந்தில்குமார்,
வக்கீல்ராஜ்குமார், பாசறை செயலாளர் உமேஷ்சந்தர், முடுவார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, விவசாய அணி ஆர்.பி.குமார், தொழிலதிபர் முத்துகிருஷ்ணன், மனோகரன், சோனை, சுப்பிரமணியன், ராதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *