எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அடுத்த அகணி கிராமத்தில் கழுமலையாற்றில் ரூ. 1கோடி 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலத்திற்கு பூமி பூஜை. மக்கள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அகணி ஊராட்சி தென்னங்குடி பகுதியில் கழுமலை ஆற்றில் உள்ள பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்ததால் சிதிலமடைந்து உள்ளது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் மாணவ மாணவிகள் விவசாயப் பணிகளுக்கு செல்லும் டிராக்டர் ஆகியவை பாலத்தை அச்சத்துடன் கடந்து சென்று வந்தனர். புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஒரு கோடியே 54 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி இன்று புதிய பாலம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நீண்ட வருட கோரிக்கையை நிறைவேற்றிட நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.