பாபநாசத்தில் ஒரு கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் பத்திரப்பதிவு அலுவலகம், மாமிச இறைச்சிக் கடை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா……

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக அரசின் சார்பில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான சட்டசபையில் வெளியிடப்பட்ட மானிய கோரிக்கையின் படி, பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் மாமிச கூடம் ஒரு கோடியே 60-லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி கட்டுமான பணிகள் துவங்குவதற்க்காக பாபநாசம் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன் ,
பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் ஆகியோர் தலைமை வகித்து பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழாவினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்
சார்பதிவாளர் காவியா ,
பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் பேரூராட்சி துணைத்தலைவர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், பிரேம் நாத் பைரன், முத்து மேரி
மைக்கேல் ராஜ் , ஜாபர் அலி, பாலகிருஷ்ணன், கெஜலெட்சுமி குமார், தேன்மொழி உதயகுமார் , ஒன்றிய பிரதிநிதி செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திமுகவின் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், பேரூராட்சி செயல் அலுவலர், பத்திரப்பதிவு அலுவலர், அரசு அதிகாரிகள், பொறியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *