பாபநாசம் செய்தனர்
ஆர் .தீனதயாளன்
பாபநாசத்தில் ஒரு கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் பத்திரப்பதிவு அலுவலகம், மாமிச இறைச்சிக் கடை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா……
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக அரசின் சார்பில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான சட்டசபையில் வெளியிடப்பட்ட மானிய கோரிக்கையின் படி, பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் மாமிச கூடம் ஒரு கோடியே 60-லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி கட்டுமான பணிகள் துவங்குவதற்க்காக பாபநாசம் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன் ,
பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் ஆகியோர் தலைமை வகித்து பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழாவினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்
சார்பதிவாளர் காவியா ,
பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் பேரூராட்சி துணைத்தலைவர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், பிரேம் நாத் பைரன், முத்து மேரி
மைக்கேல் ராஜ் , ஜாபர் அலி, பாலகிருஷ்ணன், கெஜலெட்சுமி குமார், தேன்மொழி உதயகுமார் , ஒன்றிய பிரதிநிதி செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திமுகவின் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், பேரூராட்சி செயல் அலுவலர், பத்திரப்பதிவு அலுவலர், அரசு அதிகாரிகள், பொறியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.