செய்தியாளர் கே பாலமுருகன்
ஜெயங்கொண்டம் அருகே 60 ஆண்டு காலமாக பட்டா கேட்டு போராடும் பொது மக்களுக்காக அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தேசிய பொதுச்செயலாளர் பூராசாமி அறிவிப்பு
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர்
ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளி விடை கிராமத்தில் நிரந்தரமாக வாழ்ந்து வரும் கலியமூர்த்தி வெற்றிவேல் ரவிச்சந்திரன் இவர்களுக்கு பள்ளி விடாய் கிராமத்தில் சர்வே எண் 169/4 இடம் உள்ளது அந்த இடம் நத்தம் பகுதியாகும்
அந்த இடத்தை அவர்கள் அவர்களது தந்தை காலத்திற்கு முன்னேற சுமார் 60 ஆண்டுக்கு மேலாக விவசாயம் பயிர்களான கடலை. எள் .கம்பு கேழ்வரகு .மற்றும் சோளம். என விவசாய பயிர் செய்து வருகிறார்கள் மேலும் அந்த இடத்திற்கு அரசாங்கத்திற்கு வருடம் தூரம் வாய்தா ரசிது கட்டி வருகிறார்கள்
இந்த நிலையில் இந்த இடத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு சில தனிநபர்கள் அரசியல் கட்சி ஆதிக்கத்துடன் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யவும் அந்த இடத்தை பறிக்கவும் முயற்சி செய்து வருகிறார்கள்
அதிர்ச்சி அடைந்த கலியமூர்த்தி வெற்றிவேல் ரவிச்சந்திரன் ஆகியோர் அந்த இடத்தை எங்களுக்கு பட்டா மாற்றம் செய்து கொடுக்க பலமுறை அரசு துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை
இதனை அறிந்த அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய தேசிய பொதுச் செயலாளர் தோழர் பூராசாமி தலைமையில் மாநில செயலாளர் எம் ஜி ராமச்சந்திரன் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் காட்டுமன்னார்கோயில் வட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் ராஜமாணிக்கம்
மற்றும் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தோழர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விவரம் கேட்டறிந்தனர் பின்பு இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியருக்கும் அரசாங்கத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்
அப்பொழுது அகில இந்திய பொதுச் செயலாளர் பூராசாமி செய்தியாளர்களும் இந்த இடம் இதே கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி வெற்றிவேல் ரவிச்சந்திரன் ஆகியோர்கள் முப்பாட்டன் களத்தில் இருந்து பூர்வீகமாக விவசாயம் செய்து வந்த இடமாக தெரிகிறது மேலும் இந்த இடத்திற்கு உடனடியாக தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பட்டா வழங்க வேண்டும் எனவும் அவர்களுக்கு வழங்கவில்லை என்றால் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு பணியாக இந்த இடத்தின் சம்பந்தமாக மிகப்பெரிய போராட்டம் நடைபெற எனவும் தெரிவித்தார்
அப்பொழுது இடத்தில் உரிமையாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமான இருந்தனர்
முன்னதாக அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த கொட்டகையில் உணவு சமைக்கும் போராட்டம் நடைபெற்றது