நௌசாத்,செய்தியாளர் நீலகிரி மாவட்டம்
உலக முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் 30 நாட்கள் நோன்பு இருந்து தங்களது இறை நம்பிக்கையினை கடைப்பிடித்து ரம்ஜான் பண்டிகையினை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த மாதத்தின் சிறப்பாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியினை சார்ந்த எஸ் கே எஸ் எஸ் எஃப் இஸ்லாமிய குழு சார்பாக மூன்று மாநிலங்களை ஒன்றினைக்கும் கூடலூர் பகுதிக்கு வருகை தரும் சுற்றுலா வாகன ஓட்டிகள்,பயணிகள் மற்றும் உணவின்றி தவிக்கும் ஏழ்மையானவர்கள் தங்களது நோன்பினை திறப்பதற்கு ஏதுவாக கூடலூர் -கேரள மாநில தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இப்தார் கிட் வழங்கும் நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றனர். இதனால் பல தரப்பட்ட மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.