பாபநாசம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ,கபிஸ்தலம், கூனஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளரான காளியம்மாள் பேசும்போது, கடந்த தேர்தலில் 5-லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற திமுக.வின் மயிலாடுதுறை வேட்பாளர் ராமலிங்கம், 5-முறை கூட நாடாளுமன்றத்தில் பேசியதில்லை எனவும், பொதுமக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு மருத்துவமனையில் வைத்தியம் பார்த்துக் கொள்ள தயங்குவதாகும், ஓட்டு போட்ட பொதுமக்கள் மட்டுமே வைத்தியம் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய காளியம்மாள், இரண்டாயிரம் பேர் பணி செய்த சர்க்கரை ஆலையை மூடிவிட்டு, சாராய ஆலயை திறப்பது தான் திராவிட மாடல் எனவும் குற்றம் சாட்டினார். கூட்டத்தில் 100-க்கனக்காண நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.