திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நன்னில சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதிலிருந்து கட்டப்பட்ட பல்வேறு பணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம் எல் ஏ மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
முன்னதாக தென்குவளை வேலி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூபாய் 23 லட்சத்தில் கட்டப்பட்ட ரெண்டு வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அரித்துவார மங்கலம், வீராணம், நத்தம் ஆகிய ஊர்களில் கட்டப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து வைத்தார். பின்னர் வலங்கைமானில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் வலங்கைமான் உப்புக்கார தெரு பேரூராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகில், புதிய நூலக கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம் எல் ஏ திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிகளில் திருவாரூர் உதவி கலெக்டர் சங்கீதா, தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சாவூர் மாவட்ட தலைவர் நாகராஜன், வலங்கைமான் ஒன்றிய குழு தலைவர் குமாரமங்கலம் கே. சங்கர், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் மாஸ்டர் எஸ். ஜெயபால், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஜெய. இளங்கோவன், சா. குணசேகரன், மாவட்ட நூலகர் முருகன் மற்றும் எஸ் மூர்த்தி, ஆர். ஜி. பாலா, வக்கீல் என்.ராஜ ராஜ சோழன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் எஸ். அருள்முருகன், ஆதிச்ச மங்கலம் உதயகுமார் வலங்கைமான் நூலக நூலகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.