நீலப்புலிகள் இயக்கத்தின் சார்பில் பட்டா வழங்க கோரி தேர்தல் புறகணிப்பு திருவிடைமருதூர் தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை.
தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம் முள்ளுக்குடி ஊராட்சி, வேலூர் கிராம மக்களுக்கு, வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர் இந்த நிலையில் நீலப்புலிகள் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு நடைபெறும் என அறிவித்திருந்தனர் இதனையடுத்து திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை தாசில்தார் பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் நீலப்புலி இயக்க மாநில தலைவர் புரட்சிமணி,வழக்கறிஞர்கள் கவிமணி,புகழேந்தி, பத்துக்கு மேற்பட்ட கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
அமைதி பேச்சுவார்த்தையின் முடிவில் மூன்று மாத கால கெடுவில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு எழுத்துப்பூர்வமாக வட்டாட்சியர் உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் தேர்தல் புறக்கணிப்பை தற்காலிகமாக கிராம வாசிகள் ஒத்தி வைத்தனர்.