திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை பி. ஜெயக்கொடி தலைமை தாங்கினார், பாடகச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ஆர். சாந்தி ராஜராஜ சோழன் முன்னிலை வகித்தார், பட்டதாரி ஆசிரியர் ஏ. அருண் ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ந. சு. சுகந்தி, கூடுதல் வட்டார கல்வி அலுவலர் இரா. அன்பழகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் த. ரவிச்சந்திரன், ஆசிரியர் ம. எழிலரசி, சிறப்பாசிரியர் பி சுபா, பட்டதாரி ஆசிரியர் மு. மருவரசி, இடைநிலை ஆசிரியர் க. ராஜகுமாரி, பள்ளிமேலாண்மைக்குழு தலைவர் இ. சத்யா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரா. தண்டபாணி, ஓவிய ஆசிரியர் இரா.ஸ்டாலின், சிலம்பம் ஆசிரியர் ஆ. ஸ்டீபன், வானவில் மன்றம் பி. விஜய் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, வாழ்த்துரை வழங்கினார்கள்.

முடிவில் இடைநிலை ஆசிரியர் லா. பிரின்ஸ் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள், பள்ளி மேலாண்மை குழுவினர், சத்துணவு பணியாளர்கள், காலை உணவுத்திட்ட பணியாளர்கள், முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர் மன்றம், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *