பாபநாசத்தில் அசைவ உணவு கடையை திறந்து வைத்த, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்..

பிரியாணி பொட்டலங்களை அலைமோதி வாங்கி சென்ற பிரியாணி பிரியர்கள்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மேலரஸ்தா பகுதியில் நான்வெஜ் நாயகன் என்ற பெயரில் புதிதாக அசைவ உணவுகள் மற்றும் பிரியாணி
கடை ஒன்று திறக்கப்பட்டது. அசைவ உணவகத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை ஏற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த ஏராளமான தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். திறப்பு விழா சலுகையாக இன்று ஒரு நாள் மட்டும், ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரியாணி பிரியர்கள் பிரியாணி வாங்குவதற்காக கடையில் அலை மோதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *