கரடிகுளம் கிராமத்தில் புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தார் யூனியன் கரடிகுளம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதியிலிருந்து ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது,
இந்நிகழ்வில் கரடிகுளம் பஞ்சாயத்து தலைவர் ஜெயசுந்தரி தங்கவேல் தலைமை வகித்தார், கரடிகுளம் பழனிச்சாமி மற்றும் ஊர் நாட்டாமை முன்னிலை வகித்தனர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ், ஓலைகுளம் திமுக இளைஞரணி மணி, தெற்கு இலந்தகுளம் திமுக கிளைச் செயலாளர் ஆறுமுகம், ராஜா புதுக்குடி திமுக கிளைச் செயலாளர் சதீஷ், கரடிகுளம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள், கல்லூரி பெண்கள், இளைஞர்கள்,கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கரடிகுளம் திமுக கிளைச் செயலாளர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சந்திரன் செய்திருந்தார்.