புதுவை மாநிலம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் மதகடிப்பட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடந்து வருகிறது. இதில் நான்காம் நாள் திருவிழா நேற்று சிறப்பாக நடந்தது. காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

இரவு அம்மன் மலர்களால் அலங்கரித்து கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.மேலும் அம்மனுடைய பல்வேறு காட்சிகள் அடங்கிய வண்ணக் கோலங்களை கோயில் வளாகத்தில் பக்தர்கள் கண்டு களித்தனர்.

கோயில் வளாகத்தில் நடந்த வயலில் இசைக் கச்சேரியில் பக்தர்கள் திரளாக இருந்து கேட்டு ரசித்தனர். இரவு அம்மன் உற்சவத்தில் எண்ணெய் சட்டியில் தென்னங்குருத்து ஓலைகள் அடங்கிய பூவால கொப்பரை, பூவாளக் கண்டன் முன்னே செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் தன் மடியில் சிவலிங்கத்தை வைத்திருக்கும் காட்சிக் கோலத்தில், மின்விளக்கு அலங்காரத்துடன் மேளதாளம் முழங்க, வாண வெடியுடன் இரவு வீதி உலா நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *